Saturday, July 26, 2008

தொலைந்து போன கேள்விகள்

கல்லூரியில்
கண்ணுக்கழகான
பெண்கள்
பலர்
இருந்தும்
என் கண்களுக்கு
நீ
அழகாகத்
தெரிந்தது ஏன்?

உன்னை
பார்த்தவுடன்
இதயம்
படபடப்பது ஏன்?

கடந்து போன
நீ
திரும்பிப்
பார்தது ஏன்?
திரும்பிப் பார்த்தும்
புன்னகைக்காதது
ஏன்?

நீ மழையில்
நனைந்த போது
நானும்
நனைந்தது ஏன்?
கையில்
குடையிருந்தும்!

நடுநிசியில்
உன்னை
நினைத்துக்
கவிதை
எழுதியது ஏன்?

தனிமையில்
கிடைத்த
வாய்ப்புகள்
யாவையும்
நழுவ விட்டது ஏன்?

காதலைச்
சொல்லும்
கவிதைகள்
பல இருந்தும்
அதை
உன் கையில்
கொடுக்கும்
தைரியம்
என்னிடம்
ஏன் இல்லை?

தயக்கதிலும்
உன்
அண்ணனின்
முரட்டுப் பார்வையிலும்
தொலைந்து போன
கேள்விகள்!

கடைசியில்
"தைரியம்
இல்லாதவனுக்கு
காதல்
எதற்கு?"
என்ற
நண்பனின்
கேள்விக்குக் கூட
பதில் இல்லை
என்னிடம்..!

2 comments:

Senthil Kumar said...

hi da, super blog... appreciate u... keep on writing... :)

நவநீதன் said...

நன்றி செந்தில் குமார்...!