Saturday, July 26, 2008

கவிதை 15

இந்த
உலகத்தில்
எதுவுமே
நிலையானது
இல்லை
என்று
புரிந்து கொண்டேன்!

இனிமேல்
தண்ணியடிக்கக் கூடாது
என்ற
புதுவருடக் கொள்கையை
நண்பனின்
பிறந்தநாள் பார்ட்டியில்
உடைத்த போது...!

உண்மையே
பேசுவேன் என்று
உறுதி பூண்டிருந்த வேளையில்
என் மனைவியிடம்
"நீ
அழகாய்
இருக்கிறாய்!"
என்ற போது!

என்னவள்
கொடுத்த
முத்தத்தின்
ஈரம்
காய்ந்த போது!

முப்பதாவது
முறையாக
காதலில்
தோற்ற போது!

என்
தாயின்
மரணத்தில்
அழுத போது!

என் வீட்டு
கண்ணடியில்
நரைமுடியைப்
பார்த்தபோது!

No comments: