Saturday, July 26, 2008

ஞாபகமிருக்கிறதா?

நண்பா!
சிறு வயதில்
அப்பா-அம்மா
விளையாட்டு
விளையாடுகையில்
எப்போதும்
அம்மாவாய்
அவள்!
அப்பாவுக்காய்
சண்டை வருமே
நமக்குள்!
அது ஞாபகமிருக்கிறதா?

மகாபலிபுரம் டூரில்
அவளுக்காக
ஆளுக்கொரு
மணல் கோட்டை
கட்டினோமே!
அதுவும் ஞாபகமிருக்கிறதா?

அவளுக்கு
கணக்குச் சொல்லித்
தருவதற்காகவே
கணக்குப் பாடத்தை
போட்டி போட்டுப்
படிப்போமே!
ஞாபகமிருக்கிறதா?

ஒன்பதாம் வகுப்பில்
அவளை
ஃபெயிலாக்கிய
வாத்தியாரின்
சைக்கிளை
மாறி மாறி
பங்சராக்கிய
ஞாபகமிருக்கிறதா?

ஒன்பதாம் வகுப்பு
ஏன்டா
பாஸானோம்
என்று
அடிக்கடி
அங்கலய்த்துக்
கொள்வோமே...
ஞாபகமிருக்கிறதா?

அப்பா-அம்மா
விளையட்டில் கூட
அவ்வப்போது
விட்டுக் கொடுத்துக்
கொள்ளும்
நமக்கு
பத்தாம் வகுப்பு
படிக்கையில்
அவளை
விட்டுக் கொடுக்க
மனசில்லை!

அதனால் தானோ?
இப்போது
அவளை
வேறொருவன்
கொத்திக் கொண்டு
போய்விட்டான்!

No comments: