Monday, February 16, 2009

கூட்டாஞ்சோறு - 16/02/2009

நண்பர் அறிவுக்கரசு மெயிலில் அனுப்பிய படம்.....


படம் சரியா தெரியலேன்னா, கிளிக்கி பெரிசாக்கி பார்க்கவும்...

*********************

நண்பர் சத்யா எழுதிய கவிதைகள்....
ஒரு காலத்தில்
போரே வாழ்க்கை...!
இப்போதோ...
வாழ்க்கையே போர்...!
போர் குறைய
காரணம்....
அது விளையாட்டென்று
பெயர் மற்றப் பட்டிருக்கிறது...
கிரேக்க வீரர்களால்...!
அப்போது
மண்டைகள்
பந்துகளாக
உருண்டன....!
இப்போது
பந்துகள்
மண்டைகளாக
உருள்கின்றன...!

சத்யா, மதன் எழுதிய கி.மு. கி.பி.யை படித்துவிட்டு ஓவராக பீல் பண்ணீட்டார்ன்னு நினைக்கிறேன்...!
அவர் எழுதிய இன்னொரு கவிதை....

எச்சிலில் ஒரு தேசிய சிந்தனை...!
உங்கள் எச்சில் பழக்கம்,
தேசியக் கோடியில் உள்ள
சிவப்பின் அர்த்தத்தை
திரித்துக் கொண்டிருக்கிறது...!

அதான்...!ரூமுக்குள்ள அண்ணாந்து படுத்துக்கிட்டு யோசிக்ககூடதுங்கிறது...!

*********************

எங்க குரூப்ல டவுட் தனபால் அப்டீன்னு ஒருத்தர் இருக்கிறார்...
அவருக்கு வந்த சமீபத்துல வந்த சந்தேகம்...
"நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு"ன்னு ஏன் சொல்றாங்க..."நான் புடிச்ச பன்னிக்கு ஏன் மூணு காலு"ன்னு சொல்லல...
இதுக்கு வந்த பதில்கள்...
"ஆடு மேய்க்கிற பயலுக்கு இவ்வளவு அறிவான்னு பொறாமை... இத அப்படியே ஒரு கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு நீயும் பக்கத்துல ஒக்காந்துக்க..."
"இத சொன்னவன் உன்ன பாக்கல... பாத்திருந்தா, உன்ன பிடிச்சிட்டு நான் புடிச்ச பன்னிக்கு ரெண்டு காலுன்னு சொல்லீருப்பான்..."

நம்ம பசங்களுக்கு என்னா ஒரு வில்லத்தனம்...!

*********************

நம்ம பசங்கள்ல கு.கு (குடிகார குப்பன்) ன்னு ஒருத்தன் இருக்கான்.
ஒரு பீர் அடிச்சிட்டு, குப்பைய குப்ப தொட்டில போடுறேன்னு சொல்லிட்டு, ஒரு நண்பர் மேல போட்டவன்...
இருநூத்தி இருபது ரூபா பில்லுக்கு நானூறு ரூபாய கொடுத்துட்டு மீதிய டிப்ச்சா வச்சுக்கோன்னு சொன்னவன்....
அவன பத்தி விரிவா இனி வரும் பதிவுகள்ள பார்ப்போம்...
ரெண்டு வாரத்துக்கு முன்னால கோயம்புத்தூருக்கு போயிருந்தோம்... அங்க நடந்த சுவாரசியாமான நிகழ்வுகளை மட்டும் இப்ப பார்ப்போம்...
கு.கு, நான் மற்றும் நண்பர்கள் சிலர் சரக்கடிக்க பாருக்கு போயிருந்தோம்...
சரக்கடிக்கும் போது, நண்பர் ஒருவர்ஒரு கவிதை சொன்னார்...
(ஒரு வேளை அவருக்கு ஏறிருக்குமோ...?!!)
உலகம் சுற்றுகிறது
என்கிற
உண்மை
இரண்டு பீருக்கு பின் தான்
தெரிகிறது...!
உடனே கு.கு. குஷியாகிட்டான்... நம்ம பிளாக்குல இருக்கிற கவிதைய அடிச்சு விட ஆரம்பிச்சிட்டான்... ஆனா என்ன ஒரு கருமாந்திரம்னா, அது யாருக்கும் புரியல...
அதுக்கு அப்புறம் கவிதைய சொன்னவரும், கு.கு.வும் ரொம்ப க்ளோஸ் பிரண்டு ஆகிட்டாங்க...!

இத்தோட பதிவ முடிச்சுக்கறேன்....! கு.கு. வை பத்தி இன்னொரு பதிவுல நிறைய....!

*********************

வழக்கம் போல பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க...! பிடிக்கலேன்னா பின்னூட்டத்துல திட்டுங்க சாமியோவ்வ்..............!

Monday, February 9, 2009

நான் கடவுள் - என் பார்வையில் ...

முதலில் இந்த மாதிரி ஒரு கதையை எடுக்க நினைத்ததற்காகவே பாலாவை பாராட்டலாம்... ஆரம்ப காட்சிகளிலேயே காசியும், அங்கு நடக்கும் விசயங்களையும் பக்காவாக கண்முன் நிறுத்தி, நிமிர்ந்து உக்கார வைத்து விடுகிறார். வசனங்கள் கொஞ்சமே என்றாலும் நிறைவாய் இருக்கிறது...! வில்லன் பாத்திர படைப்பு எந்த அளவுக்கு நடை முறையில் சாத்தியம் என்று பாலா தான் விளக்க வேண்டும். மூட நம்பிக்கையோட இருக்கும் ஒவ்வொரு மனிதனையும் உண்மை நிலையை கொஞ்சம் கூட வேறுபாடில்லாமல் காட்டி, அனாயசமாக கேள்வி கேட்கிறது....! இப்படிப்பட்ட கஞ்சா அடிக்கிற ஒரு சாமியாரைத் தான் நாம் தருமம் என்ற பெயரில் காசிக்கு போய் பிச்சையிட்டு விட்டு வருகிறோம். பிணம் தின்னும், தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் எதோ ஒருவரை காசிக்கு போயிருந்தால் வணங்கி விட்டு வந்திருப்போம். ஆர்யாவை மற்ற கதா பாத்திரங்கள் எல்லாமே பெரிய சாமி என்று சொல்கிறது... உண்மையில் நாமும் இப்படித்தான் நடந்து கொள்கிறோம்... நான் எல்லா சாமியார்களையும் குறை சொல்ல வில்லை. ஆனால் காசி முழுவதும் கஞ்சா அடிக்கும் சாமிகள் தான் அதிகம்.... அவர்களை வணங்கும் மூடர்களும் அதிகம். முருகன் கதாப் பாத்திரத்தை, ஒவ்வொரு கடவுளும்/வேடத்திலிருக்கும் பிச்சைக்காரகள் கேட்கும் கேள்விகள்/வசனங்கள் ஒவ்வொன்றும் பளிச்சிடுகின்றன... ! அந்த குட்டி பையன் கலக்கியிருக்கிறான்.... கவிஞர் விக்ரமாதித்தன் கடவுளை தேவிடியா பய என்று சொல்லும் போது, அந்த பாத்திரத்தின் மன நிலையையே பிரதிபலிக்கிறார்... பல இடங்களில் நம்மை யோசிக்க வைக்கும் நகைச்சுவை, இழையோடுகிறது.... படத்தில் வரும் பழைய பாடல்களும் நச். அந்த பழைய பாடல் தெரிவிலும் நெஞ்சில் நிற்கிறார். பூஜாவிற்கு மொத்தமே மூன்று உடைகள் தான் படத்தில். ஆனால், அவர் முகத்தில் அழகழகான உணர்ச்சி மாற்றங்கள்...! தமிழ் சினிமா படங்களில் காதாநாயகன் வரும் காட்சிகள் தான் அதிகம் இருக்கும். அனால், இந்த படத்தில் அர்யாவோ கெஸ்ட் ரோலில் வருவது போல் வந்துவிட்டு போகிறார். ஆனால் வரும் காட்சிகளில் மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார்.... இந்த கதையில், இமேஜை நம்பும் அஜித்தை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.... என்னுடைய நண்பர் இன்னும் கொடூரமாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தேன் என்றார் (பாலா மேல அவ்வளவு நம்பிக்கை??). படம் திரையில் ரெண்டே கால் மணி நேரம் தான் ஓடுகிறது.... ஆர்யா, பூஜாவை கடித்து தின்னும் காட்சிகளை எடுத்ததாகவும், சென்சாரில் அது பறிபோய் விட்டதாகவும் என் நண்பன் சொன்னான்....! படத்திற்காக மூன்று கிளைமாக்ஸ் காட்சிகளை எடுத்ததாகவும் பத்திரிகைகளில் படித்தேன்....! படத்தில் குறைகள் சில இருந்தாலும், நிறைகள் மிக அதிகம்....! நான் கடவுள்....! கடவுளுக்கு மிக அருகில்.....!

Friday, January 30, 2009

பாப்பா போட்ட தாழ்ப்பா....! (வயது வந்தவர்களுக்கு மட்டும்....)

"உங்கிட்ட பைக் இருக்கா? ஐ நாக்ஸ் போய் படம் பாக்கலாமா? பைக்ல உன்ன இருக்கமா கட்டி பிடிச்சுக்க்கறேன். ஆனா டிக்கெட் எல்லாம் நீதான் பாத்துக்கணும். ஒகேவா?" என்று அவள் என்னிடம் கேட்ட போது, அவள் என்னிடம் ப்ரபோஸ் பண்ணியதாகவே உணர்ந்தேன். இது நடந்த போது, சென்னையின் ஒரு பிரபல தனியார் கணினி பயிற்சியகத்தில் நாங்கள் நின்றிருந்தோம். அவள் ஒன்றும் அவ்வளவு அழகு இல்லை. டேய்...! இதெல்லாம் உன் ரேஞ்சுக்கு ரொம்ப ஓவர்...! எந்த பொண்ணுமே உன்ன திரும்பிக்கூட பாத்ததில்லடா...! என்று மனச்சாட்சி கேலி பேசியது. அதை எல்லாம் யாரு பாஸ் கேட்கிறா. ரெண்டு நாள் கழித்து, நான் அவ கிட்ட "ஐ லவ் யு" சொன்னேன்.
*************

"டேய்...! என்னடா ஒரு மொக்க பிகர பைக்ல கூட்டிகிட்டு சுத்துரியாமே...! என்ன லவ்வா? " - ரூம் மேட் தான் கேட்டான்.
"லவ்வா... சேச்சே.... நமக்கெல்லாம் மூணு ரூபா.... அரை மணி நேரம் அவ்வளவு தான்...."
என்ன புரியலையா...? மிக குறைந்த விலை காண்டமின் விலை மூன்று ரூபாய்....
*************

சிங்கார சென்னையில ஒரு பிகர வச்சு மெயின்டேயின் பண்றது ரொம்ப கஷ்டமாச்சென்னு கேக்குறீங்களா? இந்த பிரச்சனைய இப்டித்தான் சமாளிச்சேன்....
"அப்பா...! பிராஜெக்ட் பண்ணனும் ஒரு அஞ்சாயிரம் கொடுங்கப்பா...." எந்த பிராஜெக்ட் என்று அவரும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை... ஹி.. ஹி...!
*************


இப்ப மூணு மாசம் ஆகிடுச்சு... அப்ப அப்ப மிஸ்டு கால் கொடுப்பா. நானும் கடல போட்டேன். கடல போடுறது அவ்வளவு ஈஸி இல்லைங்க.
1 . எங்கருக்க ?
2. என்ன பண்ணிக்கிட்டு இருக்க?
3 . சாப்பிட்டாச்சா...?
4 . என்ன சாப்பிட்ட?
5. என்ன கூட்டு?
6. என்ன பொரியல்?
7. என்ன கொழம்பு?
8. அப்புறம்?
9. இன்னும் தூங்கலியா?
இது போன்ற மொக்க கேள்விகளை தவிர்த்து, இன்னிக்கு அவகிட்ட என்ன பேசினேன்னா....
"எனக்கு எங்கம்மா மருதாணி வச்சு விட்டாங்க... "
"எங்க " - ரொம்ப முக்கியம்...!
"கைல.... ரெண்டு கைலயும்... "
எல்லோரும் மூஞ்சியிலையா மருதாணி வச்சுப்பாங்க....
"அப்புறம் எப்டி சாப்பிட்ட..." - உலக மகா புத்திசாலித்தனமான கேள்வியை கேட்டேன்..
"சாப்பிட்ட பிறகு தானே மருதாணியே வச்சாங்க...."
அதான் தெரியுமே .... திங்குரதுல உன்ன விட பெரிய ஆளு யாருமில்லைன்னு.... வாரா வாரம் ஓட்டல்ல காட்டு கட்டு கட்டுறத, பாத்துக் கிட்டு தானே இருக்கேன்...
"எங்கம்மா ஒரு கைல மருதாணி வச்சுக்கிட்டு இருந்தாங்களா... "
"ம் ..."
"எங்க அத்த இன்னொரு கைல மருதாணி வச்சுக்கிட்டு இருந்தாங்களா ...."
"ம் ..." - இதுல ஒரு கதையா தாங்கலடா சாமி....!
"திடீர்னு எங்க மாமா வந்தாரு... வந்து, எங்க அத்தை கிட்ட இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கன்னு கேட்டாரு... அதுக்கு உடனே அத்த சொன்னாங்க ம்ம்.... மருதாணி வச்சுகிட்டு இருக்கேன்.... உங்களுக்கும் வேணும்னா வச்சு விடவா...? ன்னு, உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்துன்னு சொல்லிட்டு மாமா போயிட்டாரு...."
*************

"எங்க இருக்க ?" - நான் தான் செல்போனில் கேட்டேன்...
"பஸ்ல... வீட்டுக்கு போயிட்டிருக்கேன்... "
"சரி! அப்புறம்...."
டேய்... இந்த அப்புறத்த விடவே மட்டிங்களாடா...?
"டாட்டா எலக்சி போகுது.... சின்ன வயசுல, ஏதாவது கார பாக்கும் போது, என் தம்பிகிட்ட அது என் வண்டின்னு சொல்லுவேன்... உடனே அவன், அத ஏற்கனவே அப்பா கிட்ட சொல்லி புக் பண்ணிட்டேம்பான்.... அதுக்கு முன்னால அந்த வண்டிய பாத்திருக்க கூட மாட்டான்..."
ஐயோ...கடவுளே....என்ன எப்டியாவது இந்த மாதிரியான மொக்கைல இருந்து காப்பாத்துப்பா....
கொஞ்ச நாளா, இவ இப்படி குழ்ந்தை தானமா பேசுறது ஜாஸ்தியாகிடுச்சு. வேகமா மேட்டர முடிச்சுட்டு கழாட்டி விட்ரனும்.....
"ம்.... ஸ்டாப் வந்துருச்சு.... ஆமா உங்க ரூமுக்கு என்ன கூப்பிடவே மாட்டியா...?"
ஆஹா, அதுவா வந்து மாட்டுது.... யூஸ் பண்ணிக்கடா...
"நாளைக்கு சாயுங்காலம் ஆறுமணிக்கு வாயேன்..."
*************

எங்கள் ரூம்! மாலை ஆறு மணி... !
அவள் வந்தாள். உள்ளே நுழைந்ததும், பேசக்கூட இடம் கொடுக்காமல், கட்டி அணைத்தேன். அவளுடைய உருண்டு திரண்ட மார்பகங்கள் என் மார்பில் அழுந்துவதை உணர்ந்தேன். கட்டி பிடித்துக்கொண்டே பின்னங்கழுத்திலும் காத்து மடல்களிலும், மீசையால் மென்மையாய் உராய்ந்தேன்.



இப்போது அவள் படுக்கை அறையில் இருந்த நிலைக்கண்ணாடிக்கு முன்பு, புடவை அவிழ்க்கப்பட்டு உரித்த கோழியாய் நின்றிருந்தாள். அவளை பின்புறம் இருந்து நான் கட்டிப் பிடிக்க...., அவள் பின்புறமாக என் கழுத்தில் கைகளை மாலையாக தொடுக்க....., என் கைகள் அவள் ஜாக்கட்டிலும், தொப்புள் பிரதேசங்களிலும் விளையாட..., அவள் வெக்கத்தில் துடிக்க..., என் இதழ்கள் அவள் கழுத்து வளைவில் விளையாட..., அவள் கூச்சத்தில் நெளிய...., என் கைகள் அவள் ஜாக்கெட் பொத்தான்களுக்கு ஒவ்வொன்றாய் விடுதலை கொடுக்க...., (எப்ப தான் இந்த வரிய, முடிப்பீங்க?)

அவள் தங்க சங்கிலியை வாயில் கவ்வியபடி, என் படுக்கையில் நிர்வாணமாக படுத்திருந்தாள். இரண்டு கைகளையும் நீட்டி வா என்று அழைத்தாள். நான் அருகே போனேன். உணர்ச்சிகளின் சங்கமத்தில், உரையாடலுக்கு என்ன வேலை? அவள் மேல் கை வைக்க எத்தனிக்கையில், "ட்ரிங்... ட்ரிங்...". நான் சில விநாடிகள் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் அப்படித்தான். போனை எடுக்கும் படி கண் அசைத்தாள்.
"என்னடா பண்ணிக்கிட்டு இருக்க??? " - அவள் குரல். அதெப்படி நேரிலும் இருக்கிறாள். போனிலும் அவள் குரல்...! கண்ணை கசக்கி விட்டு பார்த்தால், அடச்சே...எல்லாம் கனவு...!
"நாளைக்கு வரும் போது, ப்ளூ கலர் புடவை கட்டிக்கிட்டு வா..."
"ஏன்டா..?"
இன்னிக்கு கனவுல உன்ன அந்த புடவைல தான் பார்த்தேன்... என்று சொல்ல நினைத்தேன்.
"உன்ன புடவையில பாத்து ரொம்ப நாளாச்சு..."
" சரி... குட் நைட்... ஸ்வீட் ட்ரீம்ஸ்... வச்சுரவா..."
என்னது... ஸ்வீட் ட்ரீம்சா... வந்த நல்ல கனவைத்தான் கலச்சுட்டியேடி...
*************

மறுநாள்....! மலை ஆறு மணி....! அவள் வந்தாள்...! வருவதற்கு முன்பே, ரூமை கொஞ்சம் சுத்தப் படுத்தி இருந்தேன். ரூம் மேட்களை ரூமில் இருக்காதீர்கள் என்று விரட்டி விட்டிருந்தேன்... (ஒரு முன்னேற்ப்பாடு தான்... ஹி.. ஹி...)
இப்போது நானும் அவளும் மட்டும் தனியாக....!
கொஞ்ச நேரம் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன்....மன்னிக்கவும்... தவறாக சொல்லிவிட்டேன்.... அவள் மடியில் படுத்து பேசிக்கொண்டிருந்தேன் என்பது தான் சரியாக இருக்கும்...! கட்டியணைத்தேன்....! இதழ்களில் முத்தமிட்டேன்....! இதெல்லாம் தேவையை உணர்த்தும் முயற்சி என்று மஞ்சள் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன்....

மூன்றாவது இதழ் முத்தத்தின் போது, காலிங் பெல் சத்தம் கேட்டது....! கண்டுகொள்ளாமல் இதழ் முத்தத்தை தொடர்ந்து கொண்டிருந்தேன்...! அவள் தான் விலக்கி, "யாருன்னு பாரு.." என்றாள். போக மனமில்லாமல் போனேன். ஒரு செல்போன் கம்பெனியின் விற்பனை பிரதிநிதி, "என்ன சிம் சார் யூஸ் பண்றீங்க?" என்றார். எரிச்சலோடு அவரை அனுப்பி விட்டு திரும்பி பார்த்தால், உடையை சரி செய்து கொண்டு கிளம்புவதற்கு ரெடியாக நின்றாள்....!
வட போச்சே....!
*************

அடுத்த பிளான் போட்டேன்...
"நாளைக்கு எனக்கு பொறந்த நாளு...." - என்னைக்கோ வர்ற பிறந்த நாளை, பிளானுக்காக முன்னாடியே கொண்டுவந்துட்டேன்... இந்த போழப்புக்குன்னு நீங்க திட்டுறது எனக்கு கேக்குது. இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியல...
"அப்டியா...எங்க வச்சு கொண்டாடலாம்?"
"உங்க வீட்ல... நீதான் உங்க வீட்ல யாரும் இருக்க மாட்டாங்கன்னு சொன்னேல்ல..."
இதாங்க பிளான்...!
"சரி... வந்துரு.."
"எனக்கு நாளைக்கு என்ன கிப்ட் கொடுக்க போற...."
"அது சஸ்பென்ஸ்"
பிளான் நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது...!
*************

அடுத்த நாள்.... அவள் வீட்டிற்கு போனேன்...!
வீட்டின் முற்றத்தில் மட்டுமே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. உள்ளே ஒரே இருளாய். இருந்த ஒரே வெளிச்சம் கேக்கின் மேல் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியும், அவள் கண்களில் தெரிந்த பிரகாசமும் தான். "ஹேப்பி பெர்த் டே டூ யு...." என அழகான குரலில் பாடத் தொடங்கினாள்.மெழுகுவர்த்தியை ஊத்தி அணைக்கும் முன், "மனசுல ஏதாவது நினைச்சுக்கோ.... பெர்த் டே விஷ்.... கண்டிப்பா நடக்கும்... " என்றாள். அவளை இன்று அடைய வேண்டும் என்ற பிறந்த நாள் விருப்பத்தை நினைத்துக் கொண்டேன். கேக்கை வெட்டி அவளுக்கு ஊட்டினேன். அதில் பாதியயு எனக்கு ஊட்டினாள்.

"கிப்ட்?" என்றேன். என் கன்னத்தில் முத்தமிட்டு "இதான் கிப்ட்..." என்றாள். ஏசு நாதர் பாணியில் மறு கன்னத்தையும் காட்டினேன்.புன்னகையோடு முத்தமிட்டாள். பிறகு என் மார்பில் சாய்ந்து கதை பேச ஆரம்பித்து விட்டாள். அவள் என்ன பேசினாள் என்று நான் சத்தியமாக கவனிக்க வில்லை. என் கண்கள் அவள் மார்பகத்தின் மேலே நிலை குத்தியிருக்க, தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவனைப் போல பதட்டத்தோடு இருந்தேன். ஒரு ஐந்து நிமிடம் போயிருக்கும். அவள் இன்னமும் பேசிக் கொண்டிருந்தாள். நினைத்து பார்க்கவே முடியாத பாகத்தில் என் கையை வைத்து அழுத்தினேன். சட்டென்று நிமிர்ந்து என்னை தள்ளி விட்டாள். அவள் கண்களில் அழுகையும் ஆத்திரமும் பீறிட்டன.
"நீ இப்டி பண்ணுவேன்னு எதிர்பார்க்கல"
"இதுல என்ன தப்பு இருக்கு....நாம லவ் பண்றோம்... கல்யாணம் பண்ணிக்கப் போறோம். "
- நல்லவன் மாதிரி நடித்தேன்.
"அதுக்காக கல்யாணத்துக்கு முன்னாலயேவா.... உனக்கு என் உடம்பு மேல தான் ஆச. இத உன் ரூமுக்கு வந்தப்பவே கவனிச்சேன்."
"என் மேல நம்பிக்கை இல்லையா....?" - காதலிக்கும் எல்லோருடைய கடேசி அஸ்திரத்தை பிரயோகித்தேன்.
"இருந்தது.... அஞ்சு நிமிசத்துக்கு முன்னால வரைககும்... ஆனா இப்ப இல்ல... " என்று தீர்க்கமான குரலில் சொல்லிவிட்டு, என்னை வெளியே அனுப்பி கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டாள். (இப்ப தலைப்போட அர்த்தம் புரிஞ்சுதா...?)
*************

பி.கு. 1
இந்த கதைக்கான கரு மனதில் தோன்றியதுமே, நான் படித்தது கேபிள் சங்கரின் இந்த நிதர்சன கதைகளைத்தான்.
என்னை பிடிக்கலையா....?
தேவர் மாப்பிள்ளை....
கல்யாணம்....
இவற்றில் எதன் தாக்கமும் வந்துவிடக் கூடாதே என்ற பயம் வேறு. தாக்கம் இருக்கிறதா இல்லையா? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

பி.கு.2 :
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால், பின்னூட்டமிட்டும், தமிழ் மணத்திலும் தமிழிஷிலும் ஓட்டு போட்டு உற்ச்சாக படுத்துங்கள். பிடிக்க வில்லை என்றால், பின்னூடத்தில் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.