Saturday, July 26, 2008

கனவு காலம்... காதல் கோலம்...

என்னவளின்
இதழில்
வடிந்த தேனை
பருகத் துடித்த
தேனீக்கள்
முகத்தை
மறைத்தன...!

தேனீக்களை
விலக்கி
முகத்தை
பார்தேன்!
திக்குமுக்காடிப்
போனேன்!
புன்னகையில்
அவள்...!

திடீரென
தொடையில்
"சுர்" என்று
ஒரு வலி!
கொட்டியது
தெனீயா?
இல்லை!
கலைந்தது
கனவு!

அழகிய கனவை
விரல்களால்
கலைத்த
நண்பனிடம்
கோவப்பட்டேன்!
என்னால்
முடிந்தது
அவ்வளவே...!

No comments: