Monday, December 29, 2008

சுடிதாரை ஒழிக்கணும் - டகுல பாண்டியின் குமுறல்...!


"டேய் டகுலா, எனக்கு பொண்ணு பாத்திருக்காங்கடா... "
"ஏன்டா, பொண்ணு வீட்ல உன்ன பத்தி சரியா விசாரிக்கலையா என்ன? "
"ஏன்டா அப்டி சொல்ற ?"
"விசாரிச்சா உனக்கெல்லாம் எவண்டா பொண்ணு குடுப்பான்?"
"டேய்..?!! " - கொஞ்சம் கடுப்பாகி விட்டான் பாஸ்கரன்.
இப்பவும் நான் விடலியே...
"எப்படின்னாலும் உன்ன பார்த்துட்டு பொண்ணு ஓடப்போகுது. சரி... பொண்ணு யாரு? என்ன மேட்டரு...?"
"தெக்கு தெரு, பிள்ளையார் கோயில் சந்துல தான் பொண்ணு வீடு... அவங்க அப்பா மளிகை கடை வச்சுருக்காருடா.... "
"அடுத்த மாசத்துல இருந்து உங்க வீட்டுக்கு மளிகை செலவு மிச்சம்ன்னு சொல்லு ..."
"விளையாடாதடா...நாளைக்கு சாயுங்காலம் ஏழு மணிக்கு நம்ம சிவன் கோயில்ல பொண்ணு பாக்க போறோம்... நீயும் வர்ற... "
ஒ... இது தானா மேட்டரு... எங்க பிரண்ட்ஸ் குருப்லையே, நான் ஒருத்தன் தான் கொஞ்சம் கருப்பு. அதனால, பொண்ணு பாக்க தொணைக்கு ஆள் பிடிக்குது நாயி...(அய்யய்யோ... நாய் கோவிச்சுகிச்சுன்னா என்ன பண்றது? ).
எப்டீன்னாலும் என்னைய விட்டா இவனுக்கு வேற ஆள் கிடையாது. இது தான் சாக்குன்னு கொஞ்சம் பிகு பண்ணுவோம்.
"நாளைக்கு எனக்கு வேல ஜாஸ்திடா... ஆடிட்டிங் வேற இருக்கு..."
"எப்படியாவது வந்துர்ரா மச்சி... நான் உங்க ஆபிச்லையே கூட வந்து பிக் அப் பண்ணிக்கிர்றேன்..."
பாருங்க மகா ஜனங்களே...! எப்படி கால்ல விழுகுரான்னு.
"சரி... பொண்ணு பாக்குறப்ப நீ பாட்டுக்கு சைட் அடிக்குரப்ப பாக்குற மாதிரி, நாக்க தொங்க போட்டுக்கிட்டு பார்த்து வைக்காத. பொண்ணு மெரண்டுர போகுது. கொஞ்சம் டீசெண்டா பாரு. சரியா...? எங்க ஒரு ரொமான்ட்டிக் லுக் விடு... "
பாஸ்கரன் என்னை பார்த்து முறைத்தான்.
"இது தான் உங்க ஊர்ல ரொமான்ட்டிக் லுக்காடா... எப்படியோ ஒரு பொண்ணு தப்பிக்க போகுது... சரி நான் வர்றேன்..."

* * * * * * * * * *


மறுநாள் மாலை ஏழு மணி... சிவன் கோவில்...

பாஸ்கர், நானு, அவனோட அப்பா அம்மா என நாலு பேர் மட்டும் மாப்பிள்ளை சைடுல வந்திருந்தோம். பொண்ணு வீட்ல இருந்து ஒரு பெரிய ஊர்வலம் மாதிரி வந்திருந்தாங்க... பொண்ணு, பொண்ணோட அப்பா அம்மா தவிர, ரெண்டு கெழடு கட்டைங்க, மூன்று நான்கு சம வயது பெண்கள், ரெண்டு மூணு சிறு குழந்தைகள்.... எல்லோரும் வந்திருந்தாங்க...
புரோக்கர் வந்து பொண்ணையும், மாப்பிள்ளையையும் அறிமுகப்படுத்தினார்.
பொண்ணு பக்கத்தில நின்னா நானே சிவப்பா இருந்தேன். டேய் இந்த பொண்ண பாக்குரதுக்காடா, யாரு கருப்பா இருக்கான்னு பாத்து என்ன கூட்டி வந்த?
அது சரி! இந்த மொன்ன நாயிக்கு இந்த பொண்ண விட்டா, வேற எந்த பொண்ணு கிடைக்கும்?
ஒரு லட்சம் ரொக்கம் தர்றேன்னு சொன்ன உடனே ஆன்னு வாயப் பிளந்துட்டான். இருந்தாலும், பொண்ணு கூட தனியா ரெண்டு நிமிஷம் பேசனும்னு தள்ளிக்கிட்டு போயிட்டான்.
அப்ப தான் அவளை பார்த்தேன். சிகப்பு கலர் சுடிதார்ல கண்ணாடி போட்ட ஒரு தேவதை மாதிரி இருந்தாள். சிறு குழந்தைகளோடு விளையாடிக்கொண்டும், கையில் ஒரு கைக் குழந்தையை வைத்து, அதை கொஞ்சிக் கொண்டும் இருந்தாள். நான் அவளை பார்த்தேன். சில சமயம் பெருமிதமாய் புன்னகைத்தாள். சில சமயம் நான் பார்க்கிறேனா என்று பார்த்துக் கொண்டாள். அரை மணி நேரம் இரண்டே வினாடிகளில் கடந்து விட்டதாய் உணர்ந்தேன். எல்லோரும் கிளம்புகையில், அவளை பார்த்து "போயிட்டு வர்றேன்" என்றேன். புன்னகையுடன் தலையாட்டினாள்.


* * * * * * * * * *
இரவு 9 மணி...!
"பாஸ்கர், இன்னிக்கு பொண்ணு பாத்தப்ப, எனக்கு ஒரு பிகரு சிக்கிருச்சுடா... நீ தாண்டா இதுக்கு ஹெல்ப் பண்ணனும்..."
"யாருடா அது? " - ரொம்ப ஆச்சர்யம் கலந்த உற்சாகத்தோட கேட்டான். நமக்கு பிகர் கிடைக்குறது இவனுக்கு ஆச்சர்யமா இருக்கு. எல்லாம் பொறாமை.
"கண்ணாடி போட்ருந்தால்ல... "
"அவங்க வீட்ல அவங்க அப்பா உள்பட, எல்லோருமே கண்ணாடி போட்ருந்தாங்கடா... வேற ஏதாவது அடையாளம் சொல்லு..."
"கொஞ்சம் குட்டையா...."
"டேய் அவங்க வீட்ல எல்லாருமே குட்ட தாண்டா..."
"சிகப்பு கலர் சுடிதார் போட்டு, சின்ன குழந்தைங்க கூட விளையாடிக்கிட்டு இருந்தாள்ல..." என்று சொன்ன உடனே கொஞ்ச நேரத்துக்கு என்னை முறைத்து பார்த்தன்.
"பொண்ணோட அம்மா பக்கத்துல நின்னுகிட்டு இருந்தாங்களே அவங்களா..." என்றான். அவங்களா என்ற மரியாதை என்னை என்னவோ பண்ணியது. அதுவும் இல்லாமல் அவனிடம் முதலில் இருந்த உற்ச்சாகம் காணாமல் போயிருந்தது.
"அமாண்டா...! " என்றேன்.
"அவங்க பொண்ணோட அக்காடா...அவங்களுக்கு கல்யாணமாகி ரெண்டு கொழந்தை இருக்கு... கூட விளையாடிக்கிட்டு இருந்ததே அது அவங்க குழந்தை தாண்டா... " என்று அவன் சொல்லி முடிக்கவும், "அப்படியா..." என்று அசடு வழிந்து கொண்டே வீட்டுக்கு வந்தேன் என்று சொல்லவும் வேண்டுமா...?!!
* * * * * * * * * *
நேரு உள் விளையாட்டு அரங்கம்.குட்டையான, திருமணமான பெண்கள் சுடிதார் அணியக்கூடாது என்ற சட்டத்தை முதலமைச்சர் அமல் படுத்தினார். நான் உற்சாகத்தோடு கைத்தட்டினேன். என் பக்கத்தில் இருந்தவன் ரொம்ப வேகமாக கை தட்டினான். என்னை விட அதிகம் பாதிக்கப் பட்டிருப்பான் போலிருக்கிறது. திடீரென்று மழை வந்தது. "இன்னிக்கு ஆபிசுக்கு லீவா...? எட்டு மணியாகுது இன்னும் தூங்குற... " என்று அம்மா கேட்டுக் கொண்டிருந்தார்கள், கையில் தண்ணீர் சொம்போடு.
* * * * * * * * * *

Friday, December 26, 2008

எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி



எண்ணங்கள், நல்ல எண்ணங்களை எண்ணுங்கள் என்று சொல்லுகிற நல்ல புத்தகம்....! ஆனால் நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும் என்று டெலிபதி ரேஞ்சுக்கு போவது தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது...! உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் வகுப்பிலோ அலுவலகத்திலோ உள்ள ஒரு பெண் உங்களை திரும்பி பார்ப்பாள் என்று எண்ணிக்கொண்டே இருந்தால் அது நிச்சயம் நடக்கும் என்பது போல் சொல்லுவது, எண்ணினால் போதும் அது நடந்துவிடும் என்ற மாய தோற்றத்தை கொடுக்கிறது. எண்ணங்களை செயல் படுத்த முயற்சிக்க வேண்டும் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டது என்கிற வருத்தம் என்னிடம் உண்டு. இப்படியான சில அபத்தங்களை தள்ளி விட்டு பார்த்தால் தமிழில் வந்த சிறந்த புத்தகங்களுள் ஒன்று...!


எனக்கு பிடித்த சுவாரசியமான பகுதிகளில் சில....


மனிதனின் எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன.
- புத்தர்


எண்ணங்களை
உள்ளே விடுங்கள். முடியும் என்ற எண்ணங்களை திரும்ப திரும்ப எண்ணுவதன் மூலம் மனதில் நம்பிக்கை பிறக்கிறது. நமது நம்பிக்கையைதிரும்ப திரும்ப சிந்திக்கும் பொது அது செயலாக பரிணமிக்கிறது. திரும்ப திரும்ப செய்யும் ஒரு செயல் பழக்கமாகிறது. பல பழக்கங்கள் மனிதனின் (character) குண நலன்களாகின்றன.
-
ரால்ப் வல்டோ டிரைன்
கொலை வாளினை எடடா
அந்த கொடியோர் செயல் அறவே...!
-
பாரதி தாசன்

இரண்டாம் உல போரின் சமயத்தில் காப்டன் ரிக்கன் பெக்கரும் அவருடைய எட்டு உதவியாளர்களும் பசுபிக் கடலில் சிறிய படகில் திசை தப்பி தத்தளித்தனர். சாப்பிட உணவு இல்லை. வழியோ தெரிய வில்லை. அவர்களிடம் இருந்தது சிறிய பைபிள் புத்தகம். ஆகவே அவர்கள் அதை திறந்து, "தண்ணீருக்கு எங்கே போவேன், சாப்பிட என்ன செய்வேன் என்று கவலைபடாதே" என்ற மாத்யூவின் வாசகங்களை படித்தனர். படித்த ஒரு கணத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ ஒரு கடல் புறா காப்டனின் தலை மீது அமர்ந்தது. காப்டன் அதை எளிதாக பிடித்து அனைவருக்கும் உணவாக வழங்கினார். மீண்டும் அரை மணியில் மழை பெய்தது. அவர்கள் குடிக்க தண்ணீர் கிடைத்தது. அவர்களுக்கு இப்போது பிழைத்துக் கொள்வோம் என்கிற நம்பிக்கை பிறந்தது. சில நாட்களில் அவர்கள் படகை பாதுகாப்பு விமானங்கள் கண்டுபிடித்தன. அவர்கள் காப்பாற்றப் பட்டார்கள்.
ஒரு வாளியில் இருந்த கறந்த பாலில் இரு தவளைகள் தவறி விழுந்தன. ஒரு தவளை எண்ணியது "நான் செத்தேன். எப்படி இதிலிருந்து பிழைக்க போகிறேன்" என்று புலம்பியது. உடனே அதன் கையும் காலும் சக்தி இழந்தன. சற்று நேரத்தில் அது இறந்தது.

இரண்டாவது
தவளையோ "இதிலிருந்து நான் எப்படியாவது தப்ப வேண்டும்" என்று எண்ணி கையையும் காலையும் உதைத்தது கொண்டதில் சற்று நேரத்தில் பால் நன்றாக கடையப் பட்ட நிலையை அடைந்தது. அதிலிருந்து வெண்ணை மிதக்க தொடங்கியது. சற்று நேரத்தில் அந்த தவளை வெண்ணையின் மீது சவுகர்யமாக உட்கார்ந்து கொண்டு ஒரு எம்பு எம்பி வெளியே குதித்தது.

ஒரு குழந்தை படம் வரைந்தது.
அதன் தந்தை "என்ன படம் வரைந்தாய் கண்ணே" என்று கேட்டார்.
"மாடு புல் தின்கிறது" என்றது குழந்தை.
"கண்ணே ! மாடு இருக்கிறது. புல் எங்கே" தந்தை கேட்டார்.
"இல்லை அப்பா! மாடு புல்லை தின்று விட்டது!" என்றது குழந்தை.

லண்டனில் ஒரு பணகார கிழவன் ஓர் ஏழை விவசாயிக்கு கடன் கொடுத்தான். விவசாயியால் பணத்தை திருப்பி கொடுக்க முடிய வில்லை. விவசாயிக்கு அழகு மிக்க பெண் இருந்தாள். அவளை தனக்கு திருமணம் செய்து கொடுத்தால் கடனை தள்ளி விடுவதாக கிழவன் சொன்னான். இதற்க்கு விவசாயியும் அவன் மகளும் உடன் பட வில்லை. பிறகு கிழவன் ஒரு யோசனை சொன்னான். "நமது முடிவை கடவுளிடம் விட்டு விடுவோம். இந்த காசுப் பையில் ஒரு வெள்ளை கூழாங்கல்லையும் கருப்பு கூழாங்கல்லையும் போடுகிறேன். உன் பெண் கையை விட்டு வெள்ளை கூழாங்கல்லையும் எடுத்தால் அவள் என்னை திருமணம் செய்ய வேண்டும். கருப்பு கூழாங்கல்லை எடுத்தால் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டாம். கடனை தள்ளி விடுகிறேன்." என்றான். வேறு வழி தோன்றாததால், விவசாயியும் அவன் மகளும் இதை ஒப்பு கொண்டனர். ஒரு நாள் மாலை கூழாங்கல்லையும் நிறைந்து கிடந்த தோட்ட பக்கமாக மூவரும் நடந்து கொண்டிருந்தனர். அபோது கிழவன் குனிந்து கூழாங்கற்களை எடுத்து பையில் போட்டான். அந்த பொல்லாத கிழவன் இரண்டு வெள்ளை கூழகாங்கல்லை எடுத்து போடுவதை அந்த பெண் கவனித்து விட்டாள். ஏதாவது ஒரு கல்லை எடுக்க சொன்ன போது, அவள் பையில் கையை விட்டாள். ஒரு கூழாங்கல்லை எடுத்தாள். உடனடியாக அதை நழுவ விட்டாள். கீழே கிடந்த மாற்ற கற்களுடன் ஒன்றாக அது மறைந்து விட்டது. "எனக்கு கை நடுங்குகிறது " என்றாள் அவள்.

"நீங்கள் பையில் பாக்கி இருப்பது என்ன நிற கல் என்று பார்த்தால் நான் எதை எடுத்தேன் என்று தெரிந்துவிடும்." என்றால். பையில் பாக்கியிருந்தது வெள்ளை நிற கல். ஆதலின் எடுத்தது கறுப்பாக தான் இருக்க வேண்டும். அவள் அந்த கிழவனை மணம் முடிப்பதிலிருந்து தப்பி விட்டாள். கடனும் தீர்ந்தது.
பிரச்னையை நான்கு கூறுகளாக பாகு படுத்தலாம்.
1. பிரச்சனை என்ன?
2. என்ன முடிவை விரும்புகிறோம்?
3. அந்த முடிவை அடையும் வழிகள் யாவை?
4. அவற்றில் சிறந்த வழி எது?
தன்னம்பிக்கையை வளர்க்க,

1. முகத்தில் புன்னகையை தவழ விடுங்கள்.
2. கொஞ்சம் கம்பீரமாக பாருங்கள்.
3.தலை நிமிர்ந்து நடங்கள்.
4.நடக்கும் வேகத்தை சிறிது அதிகப் படுத்தி பாருங்கள்.
5.பிறருடன் பேசும் போது குரலை உள்ளே விழுங்காமல் தெளிவாக நிதானமாக பேசி பாருங்கள்.
6. கூடங்களில் முன் வரிசைகளில் அமர்ந்து பழகுங்கள்.
7.பிறருடன் பேசும் போது கண்களை கண்ட இடத்திலும் பரவ விடாமல் பேசுபவரின் கண்களை நோக்கி செலுத்துங்கள்.


"தமிழ் நாட்டில் எந்த ஊரில் எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊருக்கு கட்டை வண்டியில் போக வேண்டும் என்பதெல்லாம் எனக்கு தெரியும். இதெல்லாம் பூகோள படமில்லை என்றால் நான் படிக்காதவன் தான்"
- கர்ம வீரர் காமராஜர்.


மேதை தனம் என்பதெல்லாம் ஒரு சதம் உத்வேகமும் 99 சதம் கடின உழைப்பும் தான்.
வெற்றிக்கு உழைப்பு தான் குறுக்கு வழி.
மேலே செல்லுங்கள்.
விடா முயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவும் இல்லை. திறமை ஈடாகாது. திறமை இருந்தும் தோல்வி பெறுவோர் சகஜம்.
மேதை தனம் ஈடாகாது.
பலன் காணா மேதைகள் என்பது பழ மொழி.
கல்வி மட்டும் ஈடாகாது.
இந்த உலகம் படித்தும் பாதை தவறியவர்களால் நிறைந்திருக்கிறது.
விடா முயற்சியும் உறுதியும் மட்டும் சர்வ வல்லமை படித்தவை.
- கால்வின் கூலிக் ( அமெர்க்க ஜனாதிபதி)


பயமெனும் பேய்தனை அடித்தோம்
பொய்மை பாம்பை பிளந்துயிரைக் குடித்தோம்.


சிறிய விசயங்களை பற்றி என் கவலைப்பட வேண்டும்? அதனால் ஒன்றும் தலை போய் விடாது. பெரிய விசயங்களை பற்றி என் கவலைப் பட வேண்டும்? என்ன தான் கவலை பட்டாலும் அதன் விளைவுகள் மாறப் போவதில்லை. ஆகவே, எப்படி பார்த்தாலும் சிறிய விஷயங்களுக்கோ பெரிய விஷயங்களுக்கோ கவலை படுவதில் அர்த்தமே இல்லை.

அமெரிக்க டெலிவிசன் செய்தி ஆசிரியர்களுள், எரிக் சவரைட் என்பவர் புகழ் பெற்றவர். அவர் எழுதுகிறார். "நாங்கள் பர்மா காட்டிற்குள் சிக்கி கொண்டோம். பலர் இறந்து போனார்கள். எங்கள் கதி என்ன என்று பிறர் அறிய வழி ஏதும் இல்லை. என் காலில் காயங்கள். காலை எடுத்து வைக்க முடியாத நிலை. சுமார் 140 மைல்கள் நடந்தால், நகர் எல்லையில் உள்ள எங்கள் முகாமுக்கு போய் சேரலாம். எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு மைல் நடப்போம் ஏதாவது ஊர் வரும் என்று எண்ணியவாறு நடந்தேன். ஒவ்வொரு மைலாக கடந்தேன். சில நாட்களுக்கு பிறகு ஒரு கிராமம் தெரிந்தது."


இந்த இணைப்பை பயன்படுத்தி எண்ணங்கள் புத்தகத்தின் ஒலி வடிவை நீங்கள் கேட்கலாம்....

Tuesday, December 2, 2008

டகுல பாண்டிக்கு வழங்கப்பட்ட செக்ஸ் ஆலோசனைகளும் அதன் விளைவுகளும்....!


திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு...
நான் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய மஞ்சள் பத்திரிக்கைகளை படித்து கொண்டிருந்தேன்.
"என்னடா பண்ணுற...???" - என் பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது. திரும்பினால், நம்ம நண்பன் அரை டவுசர் டோமரு எட்டிப்பார்த்தான். (நம்ம கூட சேர்ரவங்க எல்லோரும் இப்பிடித்தான் இருப்பாய்ங்களோ...???).
"ஹி..ஹி... ஒண்ணுமில்லண்ணே ..." என்று சொல்லிக் கொண்டே புத்தகத்தை மறைத்தேன்.
"சீன் புக்கு தானே... டேய்... இதெல்லாம் ஏட்டறிவு...ஏட்டு சொரைக்காய் கறிக்கு உதவாது."
"என்னது நம்ம ஏட்டு கறி சமைக்க போறாரா?"
"இந்த நக்கல் தானே வேணாங்கிறது. எதோ ஒன்னுந்தெரியாத புள்ளைக்கு நாலு advise- போடலாம்ன்னு பார்த்தா ரொம்ப தான் நக்கல் பண்றீங்கடா... அடாதீங்கடா. அடங்குங்க.."
"சரிண்ணே... சொல்லுங்கண்ணே..."
"புத்தகம்லாம் வேலைக்காவாது... அனுபவம் தான் வேலைக்காவும். என்ன மாதிரி அனுபவம் இருக்குறவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ..." என்றான் அர டவுசரு.
இவனுக்கு கல்யாணமாகியே ஒரு மாசந்தான இருக்கும். இவன் எதோ இதுல பி.ஹெச்.டி வாங்கிட்ட மாதிரி பேசுறான்.
"டேய்... செக்ஸ்ல சில விஷயங்கள் ரொம்ப முக்கியம். இதை எல்லாம் நீ மனசுல வச்சுக்கோ...
1. பொண்ணுங்க கண்ணாடி மாதிரி... ரொம்ப ஸாஃப்ட்டா handle பண்ணனும்..
2. அடிக்கடி கட்டி புடிச்சு ' லவ் யூடான்னு' புருடா விடனும்..
3. அடிக்கடி அவ அழகா இருக்கான்னு கவித சொல்லணும்...
4. அவ பண்ணி இருக்குற சாப்பாடு நல்லா இருக்குன்னு கத விடனும்...
5. மல்லிக பூவும் அல்வாவும் வாங்கி கொடுக்கணும்...
இப்பிடி ஏக பட்ட மேட்டர் இருக்குடா... "
அடங்கொய்யால.... நீயெல்லாம் சொல்லி நான் கேக்க வேண்டியதா போயிடுச்சு பாரு. என் நேரம்டா... என்று நினைத்துக் கொண்டே
"அண்ணே... இதுக்கும் செக்ஸுக்கும் என்னண்ணே சம்பந்தம்..."
"அட மடப்பயலே...! இப்பிடியெல்லாம் பண்ணினாத்தாண்டா, செக்ஸே நடக்கும். சரி. அந்த புக்க குடு நான் பாத்துட்டு தாரேன்... " என்று புத்தகத்தை புடிங்கிக் கொண்டு போய்விட்டான்.
டேய்... அனுபவம் இருக்குறவனுக்கு புக் எதுக்குடா?

அன்பர்கள், செக்ஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு இந்த இணைப்பை அணுகவும்...
நீங்கள் ஏற்கனவே டகுல பாண்டியின் முதலிரவில் நடந்தது என்ன? என்பதை பற்றி படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் இங்கே போய் படிச்சுக்கலாம்.


திருமணத்திற்கு பின்பு... ரொம்ப நாள் கழிச்சு அவ அன்னிக்கு தான் சமையல் பண்ணினா. சரி இன்னிக்கு சமையல் நல்லாருக்குன்னு சொல்லி நைட்டுக்கு உஷார் படுத்தீரலாம் அப்படீன்னு நினைச்சுகிட்டே இருக்கும் போது அவளே சாப்பாடை பரிமாறினா.
"வட நல்லாருக்கு...." என்றேன் எந்த உணர்ச்சியையும் காட்டாமல்.
அவள் என்னை முறைத்தாள்.
"ஏன் " - என்றேன் திகைப்பாய்.
"இன்னிக்கு வடையே பண்ணல. அது பணியாரம். கொஞ்சம் இனிப்பு கம்மியா இருந்தா உடனே வடைன்னு சொல்லிருவீங்களா??"




சரி இன்னிக்கு கவித சொல்லி கரெக்ட் பண்ணிரலாம்னு கவிதைய யோசிச்சு கிட்டே இருக்கேன் ஒண்ணுமே வரல. முன்ன பின்ன கவித எழுதியிருந்தாவுல. சரி எங்கயாவது புத்தகத்துல படிச்சு காப்பி அடிச்சுடலாம்னு பார்த்த, படிக்குற பழக்கம் காலேஜ்ல இருந்து நமக்கு சுத்தமா கிடையாது. (அதுக்கு முன்னால மட்டும் இருந்தாதா என்ன..???)
இப்படியெல்லாம் யோசிச்சு கிட்டு (அட மக்கா யோசிக்கவெல்லாம் செய்ரியாடா ..) இருக்கும் போதே, அவ வந்தாள்.
"ஏங்க தல வலிக்குதுங்க... "
"தல வலி...
வலி தல ...
தலையில வலி
வலியில தல" - ரொம்ப சீரியசாக கவிதைக்கு முயன்று கொண்டிருந்தேன்.
என்னை எரித்து விடுவது போல் பார்த்தாள். ஏற்கனவே இருக்கும் தல வலியில், இந்த தல வலி(என் கவிதை தான்..!!?) வேறயா... ?? அப்படீன்னு நினச்சிருப்பாளோ...?






அவ கிச்சன்ல சமச்சுக்கிட்டு இருந்தா. அர டவுசர் டோமரு சொன்ன, கட்டிபுடி யோசனைய try பண்ணி பாக்கலாம்ன்னு போனேன். அவள கட்டி புடிக்குரதுங்குறது பெரிய காரியந்தான். அவ கொஞ்சம் (கொஞ்சமாடா?) குண்டுன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன். ஒரு ஆல மரத்த கட்டிபுடிக்குற மாதிரி குத்து மதிப்பா புடிக்க வேண்டியதுதான்னு நெனைச்சு கிட்டு,
கைய விரிச்சுகிட்டு போனேனா... அப்ப பாத்து பக்கத்துல வேலைக்காரி நிக்குறா. சரி இருந்தாலும் பரவாயில்ல நம்ம பொண்டாட்டிய தானே கட்டி புடிக்க போறோம்ன்னு முன்னேறினேன்.
"ஐயோ...என்ன இது? " - என்று அவள் வெக்கப் பட்டுக்கொண்டே நெட்டி தள்ள நான் கிழே கிடந்தேன். மூக்காந்தண்டு உடைந்து ரத்தம் வந்து கொண்டு இருந்தது.
"அச்சச்சோ..." - பரிதாபப் பட்டாள்.



புத்திசாலிகளுக்கு மட்டுமல்ல... ஆங்கிலம் தெரிந்த எல்லாருக்கும்.....

என் கல்லூரி நண்பர் செந்தில் நாதன், அவர் certification பண்ணியதையும், அவர் வீட்டில் திருடு போனதை பற்றியும் எழுதியுள்ளார். ஆங்கில அறிவுள்ள அன்பர்கள், கொடுக்கப் பட்டுள்ள இணைப்புகளில் போய் படித்துக் கொள்ளலாம்...