Saturday, July 26, 2008

சுனாமி

கடல் அன்னையே!
புண்ணிய நதிகள் பல
உன்னிடம்
பரிணமித்தும்
நீ இன்னும்
புனிதமாக வில்லையா?
ஏன்
ஏழை மக்களின்
வயிற்றில் அடித்து
பாவத்தை
சம்பாதித்துக் கொள்கிறாய்?

கடவுளே!
உறவுகளையும்,
உடைமைகளையும்
இழந்து
அழும்
இவர்களுக்கு
ஆறுதல் சொல்ல
என்னிடம்
ஒரு வார்த்தை கூட
இல்லை!
உலக மொழிகளை
ஆரய்ந்து
ஏதாவது
ஒரு வார்த்தை
இருந்தாலாவது
சொல்!
சிலராவது
ஆறுதலடையட்டும்!

பகவானே!
பெற்றொரை
இழந்து
பசியால் அழும்
ஏழைக் குழந்தையிடம்
"இந்த மாற்றங்கள்
உலக நியதி"
என்று
தத்துவம்
பேசிக் கொண்டிருக்கிறாய்!
இது தகுமா?

இறுதியாக,
சுனாமி!
பத்திரிக்கைகளுக்கு
பரபரப்பு!
அரசியல்வாதிகளுக்கு
அரசியல்!
மக்களுக்கு
அனுதாபம்!
ஆனால்
பாதிக்கப்பட்டவர்க்களின்
எதிர்காலம் மட்டும்
அந்தோ... பரிதாபம்

No comments: