Saturday, July 26, 2008

கவிதை 36

உன் கண்களில்
ஆரம்பித்து
இதயம்,
இமைகள்,
இடை,
இதழ்கள்,
கூந்தல்
என்று
ஒவ்வொன்றாய்
வர்ணித்து
கவிதை பாடிய பின்
மனமுவந்து (மனமிரங்கி??)
"உன்
ஹேர் ஸ்டைல்
கூடத்தான்
அழகாயிருக்கு"
என்று
ரொம்பச்
சாதாரணமாகத் தான்
நீ
சொன்னாய்!

அன்றிலிருந்து
என்
சிகை அலங்காரத்தை
மாற்றவே
இல்லை
நான்..!

நான்
ஒவ்வொரு முறை
தலை முடியைச்
சரி செய்யும்
போதும்
என்
கண் முன்
தோன்றி
ஒரு மெலிதான
புன்னகை
பூத்து.
"உன்
ஹேர் ஸ்டைல்
நல்லாயிருக்கு"
என்று
சொல்லி
மறைவாய்!

அந்த
தருணத்திற்காகவே
அடிக்கடி
தலை வாரியதில்
முன் மண்டையில்
சின்னதாய்
வழுக்கை விழ
ஆரம்பித்திருந்தது!

ஆனால்
நீயோ
கரு கருவென
தலைமுடியுடன்
கூடிய
ஒருவனுடன்
சிரித்துக் கொண்டிருக்கிறாய்
உன்
கல்யாணப் பத்திரிக்கையில்!

No comments: