அன்பே!
என் இதயம் கூட
வலம்புரிச்
சங்கு தான்!
எப்போதும்
உன் பெயரையே
உச்சரித்துக்
கொண்டிருப்பதால்!
நான் கூட
ஃபீனிக்ஸ்
பறவை தான்!
உன் பார்வைகளில்
ம்ரணித்து
உன் புன்னகைகளில்
உயிர்த் தெழுவதால்!
நீ கூட
கலைமான் தான்!
மானின்
மருட்சியோடு
கண்களால்
காதல் கலையை
எனக்கு
கற்பிப்பதால்!
No comments:
Post a Comment