Saturday, July 26, 2008

கவிதை 39

கம்பன் வீட்டில்
கட்டுத் தறிதான்
கவி பாடும்!
ஆனால்
நீ
பயன்படுத்திய
சோப்பு,
முகம் பார்க்கும்
கண்ணாடி,
உன்
பாதங்கள்
சுமக்கும்
காலணி,
உனக்காகவே
பூப்படையும்
ரோஜா செடி,
உன் ஒற்றைப்
புன்னகை
என
ஒவ்வொன்றுமே
கவிதையாகிறதே
என் மனதில்!

No comments: