இதில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் கற்பனையே. யாருடைய வாழ்க்கையோடும் ஒத்துப் போனால் அது தற்செயலானதே..
நான் கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். அவள் பால் டம்ளருடன் உள்ளே வந்தாள். அவள் சைசுடன் ஒப்பிடும் போது பால் டம்ளர் சிறியதாக இருந்தது. சைசுன்னா தப்பா நினைச்சுக்காதீங்க. அவ கொஞ்சம் குண்டு. இன்னிக்கு காலையில (கல்யாணத்தப்ப), ஒருத்தர் "இந்த காலத்து பசங்களுக்கு நமீதா மாதிரி கொழு கொழுன்னு இருந்தா தான் பிடிக்குது " ன்னு கமெண்ட்டிட்டார். ஹி.. ஹி.. (ஐ... இப்பவே ஒரு கமெண்ட் கெடச்சுருச்சு...).
இப்ப அவ பக்கத்தில் வந்திருந்தாள். பால் டம்ளரை நீட்டினாள். வாங்கிக் கொண்டேன். அவள் கையில் பால் டம்ளர் சிறியதாக இருந்ததாலும், அவளுக்கு ஒரு சொம்பு பாலே பத்தாது என்பதாலும், நான் கொஞ்சம் பதட்டமாக இருந்ததாலும், (இப்பிடியே எத்தனை இருந்தாதாலும் போடுவீங்க???) .... பாலை குடிப்பது போல் பாவனை செய்து விட்டு அவளிடம் கொடுத்து விட்டேன். அவள் கண நேரத்தில் அதை ஸ்வாகா பண்ணி விட்டாள்.
"இங்க தானே இருக்கும். காணோம் ??", என்று சொல்லிக்கொண்டே அவள் பருத்த இடையை பற்றினேன்.
"என்ன??" - கொஞ்சம் மிரட்டும் தொனியில் தான் அவள் கேட்டாள்.
"இல்ல, இடுப்பு இங்க தானே இருக்கும். அத காணோமே-ன்னு கேட்டேன்..." - என்று கொஞ்சம் பம்மினேன். ஐயோ... ஐயோ... இதை மட்டும் என் பிரண்ட்ஸ் கேட்ட்ருந்தாங்கன்னா, என்ன அடிச்சே கொன்றுப்பாங்க...
"ச்சீ.. போங்க..." என்று கையை தட்டி விட்டாள். இதுக்கு பேரு தான் வெட்கமாம். கடவுளே என்னை எப்படியாவது காப்பாத்துப்பா...
என் பார்வை அங்கே வைக்கப் பட்டிருந்த லட்டு மேல் விழுந்தது. முதல்வன் படத்தில், அர்ஜுனும், மனீஷா கொய்ராலாவும் பீடாவை இரண்டு வாய்களுக்கும் இடையில் கால்பந்து விளையாடுவதைப் போல லட்டை வைத்து விளையாடினால் என்ன என்ற எண்ணம் மனதில் ஓடியது. அதை செயலாக்கிட முடிவு செய்து, ஒரு லட்டை எடுத்து அவள் வாயில் ஊட்டினேன். லபக் என்று லட்டை வாங்கிக்கொண்டாள்(வாயால் தான்... ஹி.. ஹி..). நல்ல வேளை கையை கடிக்க வில்லை. இப்போது அவள் ஆரம்பித்து விட்டாள் (Now, she takes over.). லட்டை சாப்பிடத்தான். ஒவ்வொரு பதார்த்தமாக பதம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எப்படி கொழு கொழு என்று இருக்கிறாள் என்பதற்கான காரணம் அப்போது தான் தெரிந்தது. இப்படி சாப்பிட்டே என் சொத்தில் பாதியை அழிக்கப் போகிறாள். நான் பரிதாபமாக அங்கே உட்கார்ந்திருந்தேன். அவளுடைய வாய் மெஷினை விட வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.
சரி. நாம ஆரம்பிக்கலாம் என்று சொல்லி என் வாயை அவள் அருகே கொண்டு போனேன். ஒரே வாய் துர்நாற்றம். எல்லாம் லட்டு செய்த மாயம். சரி உதட்டுல முத்தமிட வேண்டாம் என்று பக்கத்தில் இருந்த கன்னத்துக்கு இடத்தை (டார்கெட்டை) மாற்றினேன். கன்னத்தில் இருந்த ஒரு பவுடரில் ஒரு லேயர் என் வாய்க்குள் போனது.
சரி அடுத்து என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, "அந்த ஃபேனை போடுங்க... வேர்க்குது " - என்றாள். பெண்கள் எப்படித் தான் இப்படி அடுத்தவர்களை ஈஸியாக வேலை வாங்குகிறார்களோ? என்று எண்ணிக்கொண்டே ஃபேனை போட்டேன். வேலை வாங்குவது என்றவுடன் ஒரு சம்பவத்தின் ஞாபகம் வருகிறது. அதையும் இங்கே இடை செருகலாக சொருகி விடுகிறேன்.
நாங்கள் மேன்சனில் தங்கி இருந்த போது, "இந்த துவைக்கிற வேலைக்காகவே கல்யாணம் பண்ணிக்கனும்டா மச்சி..." என்று அங்கலாய்ப்பதுண்டு.
அப்போது ஒருவன் "இதுக்காக கல்யாணம் பண்ணினேன்னா, அப்புறம் தொவைக்கிற வேலை டபுள் ஆகிடும். அவ துணியவும் செத்து துவைக்க வேண்டி வரும். ஜாக்கிரதை" என்றான்.
இப்படியாக நான் சிந்தனையில் இருக்கும் போது, "நீங்க சாப்பிடலை?" என்று அவள் தான் (ஏழெட்டு தட்டுகளை சுத்தமாக முடித்த பிறகு) மனமுவந்து கேட்டாள். மனைவி சொல்லை தட்ட முடியுமா?? அதுவும் முதலிரவில். கடேசியாக மிச்சமிருந்த ஒரு லட்டை எடுத்து அதில் பாதியை கடித்தேன். மீதியில் என் சட்டை குளித்தது. ஹி..ஹி.. என்று பல்லைக் காட்டினாள்.
"சரி எனக்கு தூக்கம் வருது " என்று சொல்லிவிட்டு படுத்த அடுத்த கணத்தில் குறட்டை விட ஆரம்பித்தாள். நான் வேகமாக ஓடிக்கொண்டிருந்த ஃ பேனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
Wednesday, October 22, 2008
Saturday, October 11, 2008
ஒரு அப்பாவியை நாய் கடித்த கதை.
நான், நண்பர் சத்யா, வேலுமணி இன்னும் பிற நண்பர்களுடன் அலுவலக கான்டீனில் டீ சாப்பிட்டுகிட்டு இருந்தோம்.
வேலுமணி தான் ஆரம்பித்தார். "என்ன நாய் கடிச்சுடுசுப்பா". சொல்லும்போதே சத்யா சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
"எப்படிங்க??" - இது நான்.
"பேசிக்கிடே வந்துக்கிட்டு இருந்தேன். கீழ இருந்த நாயை கவனிக்கல. மிதிச்சுட்டேன். கடிச்சுடுச்சு." ரொம்ப பாவமாக சொல்லிக்கொண்டிருந்தார் வேலுமணி.
இப்போது சத்யா சிரித்துக்கொண்டே "ஏய்! பேசிக்கிடேவா வந்த என்ன திட்டிகிட்டே இல்ல வந்த. அதான் நாய் கடிச்சுடுச்சு "
"ஏங்க அந்த நாய் உயிரோட இருக்கான்னு பார்த்தீங்களா? உங்களைக் கடிச்சு நாய்க்கு ஏதாவது ஆகிரப்போகுது?" - நான் தான் கொஞ்சம் கலகலப்பூட்ட முயற்சித்தேன்.
"அதெல்லாம் பார்த்துட்டேன். ஒண்ணும் ஆகல. நல்லத்தான் இருக்கு. நமக்குத்தான் ஊசி போட்டு நூறு ரூபாய் செலவு" - என்றார் அப்பாவியாக. (ரூமில் எல்லோரும் அந்த நாய் செத்தால் உங்களுக்கும் ஏதாவது ஆகிடும்-ன்னு பயமுறுத்தி இருந்தார்கள்.)
"அது, வேலு மிலிட்டரி ஓட்டல்ல எலும்புக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்திருக்கும். அந்த சமயத்தில வேலு மிதிச்சதால, வேலுவோட எலும்பை பதம் பார்த்திருக்கும்"
(இதில் குறிப்பிடத்தக்க ஒன்று வேலு கொஞ்சம் ஒல்லியாக இருப்பார்.)
சரி இன்னும் டேமேஜ் ஆக வேண்டாமே என்று வேலு மணி கிளம்பிவிட்டார். சரி அன்றைய கொட்ட முடிந்தது என்று நாங்களும் கிளம்பி விட்டோம் வேலையை பார்க்க.
வேலுமணி தான் ஆரம்பித்தார். "என்ன நாய் கடிச்சுடுசுப்பா". சொல்லும்போதே சத்யா சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
"எப்படிங்க??" - இது நான்.
"பேசிக்கிடே வந்துக்கிட்டு இருந்தேன். கீழ இருந்த நாயை கவனிக்கல. மிதிச்சுட்டேன். கடிச்சுடுச்சு." ரொம்ப பாவமாக சொல்லிக்கொண்டிருந்தார் வேலுமணி.
இப்போது சத்யா சிரித்துக்கொண்டே "ஏய்! பேசிக்கிடேவா வந்த என்ன திட்டிகிட்டே இல்ல வந்த. அதான் நாய் கடிச்சுடுச்சு "
"ஏங்க அந்த நாய் உயிரோட இருக்கான்னு பார்த்தீங்களா? உங்களைக் கடிச்சு நாய்க்கு ஏதாவது ஆகிரப்போகுது?" - நான் தான் கொஞ்சம் கலகலப்பூட்ட முயற்சித்தேன்.
"அதெல்லாம் பார்த்துட்டேன். ஒண்ணும் ஆகல. நல்லத்தான் இருக்கு. நமக்குத்தான் ஊசி போட்டு நூறு ரூபாய் செலவு" - என்றார் அப்பாவியாக. (ரூமில் எல்லோரும் அந்த நாய் செத்தால் உங்களுக்கும் ஏதாவது ஆகிடும்-ன்னு பயமுறுத்தி இருந்தார்கள்.)
"அது, வேலு மிலிட்டரி ஓட்டல்ல எலும்புக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்திருக்கும். அந்த சமயத்தில வேலு மிதிச்சதால, வேலுவோட எலும்பை பதம் பார்த்திருக்கும்"
(இதில் குறிப்பிடத்தக்க ஒன்று வேலு கொஞ்சம் ஒல்லியாக இருப்பார்.)
சரி இன்னும் டேமேஜ் ஆக வேண்டாமே என்று வேலு மணி கிளம்பிவிட்டார். சரி அன்றைய கொட்ட முடிந்தது என்று நாங்களும் கிளம்பி விட்டோம் வேலையை பார்க்க.
சந்தையில் புதுசு (sexy and hot)

என்னவெல்லாம் கண்டு பிடிக்குறாங்க பாருங்க.
பிடிமானம் இல்லாத செருப்பு.
விலை அதிகமில்லை 380 ரூபாய் தான்.
சுட்டிக்கு இங்கே 'கிளிக'்குங்கள்.
Monday, September 22, 2008
தேசிய கொடியை கேவலப்படுத்தியவர்கள்...!
ரத்தத்தை சூடேற்றும் காட்சி இன்று ஈ-மெயிலில் வந்தது.
காஷ்மீரத்தின் ஒரு கட்சி தலைவர் தேசியக் கொடியை எரிக்கும் காட்சி....
mail-லில் வந்ததை அப்படியே தமிழ் படுத்தி தருகிறேன்.
இந்த காட்சியை media-க்கள் கண்டுகொள்ளாதது ஆச்சர்யம் தான்.
ஒரு தேசியக் கொடியை எரிப்பதை கண்டுகொள்ளாத ஒரே நாடு இந்தியாகத் தான் இருக்கும்.
இதை சுடு செய்தியாக்காத (அதாங்க breaking news) media-க்களை என்ன செய்வது???
கீழே கொடுக்கப்பட்டவை எல்லாம் மசாலா சுடு செய்திகளாக இந்திய செய்தி நிறுவனங்களில் வந்தது.
1. தேசியக் கொடியை போலவே கேக் செய்து வெட்டியதற்காக, தெண்டுல்கர் மீது கண்டனம் தெரிவிக்கப் பட்டது.
2. மந்திரா பேடி, தேசிய கொடி போடப்பட்ட சேலையை அணிந்ததால் மன்னிப்பு கேட்க வைக்கப் பட்டார்.
3. கொல்கட்டவிலும், பெங்களுரிலும் ஒரு போலீசார் கொடியை கீழே எரிந்ததால் வேலையை இழந்தனர்.
மேலே கூறப்பட்ட சம்பவங்கள் சரி என்று கூறவில்லை. அதற்காக இங்கே காட்டப் பட்டுள்ள படங்கள் சரியும் அல்ல...
1. அமர்நாத் விவகாரத்தின் போது, ஜம்முவை சேர்த்த சிலர் "பாரத மாதா வாழ்க!" (bharath matha ki jai) என்று முழங்கிய போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
2. அதே அமர்நாத் விவகாரத்தின் போது, காஷ்மிரைச் சேர்ந்த சிலர் இந்திய தேசியக் கொடியை எரித்து விட்டு, பாகிஸ்தான் கொடியை வைத்துக் கொண்டு, "இந்தியா ஒழிக! பாகிஸ்தான் வாழ்க..!" (Hindustan Murdabad, Pakistan Jindabad) என்று முழக்க மிட்டனர். அதற்க்கு வெற்று கண்டனம் கூட தெரிவிக்கப் பட வில்லை.
3. ஒவ்வொரு ஆகஸ்ட் 14-யிலும் (பாகிஸ்தானின் சுதந்திர தினம்), காஷ்மீரில் உள்ள அரசு அலுவலகங்கள் உட்பட எல்லா இடங்களிலும் பாகிஸ்தான் கோடி ஏற்றப்பட்டு, மறுநாள் (இந்திய சுதந்திர தினம்) இந்திய கொடி எரிக்கப் படுகிறதாம்.
மேலே சொல்லப் பட்டதெல்லாம் உண்மையா??? விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ...!
அய்யா.. புண்ணியவான்களே... இது ஏதாவது blog-க்கில் ஏற்கனவே வந்துருந்தா சொல்லிருங்கைய்யா... நன்றின்னு சொல்லி பேர் போட்டு விடுகிறேன். நான் பதிவுத்திருடன் எல்லாம் கிடையாது... mail-லில் வந்ததை பதிவு செய்திருக்கிறேன்.
Monday, September 8, 2008
கோயில் .... (எழுத்து: நவநீதன் இயக்கம்: ஹரி அல்ல)
கோவிலுக்குச்
சென்றேன்...!
கொலுசொலி
இசைத்தது!
திரும்பினேன்!
கொடியிடை
தெரிய
புடவை கட்டிய
பதுமை நின்றது!
கொடி
நளினமாய்
அசைந்தது!
அவள்
என்னைக்
கடந்து சென்றாள்!
கோவில்
வாசலிலேயே
தேவி தரிசனம்
கிடைத்தது!
அர்ச்சனைத்
தட்டிலிருந்த
தீபம்
அவளை
தொடப் போகும்
சந்தோசத்தில்
ஆனந்த கூத்தாடியது!
கோவில் சிலைகள்
அழகு சிலையை
கண் கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருந்தன!
சிங்க முக
அரக்கன் கூட
அவளைப் பார்த்து
வாயைப்
பிளந்து விட்டான்!
திருமால்
அரக்கனைக்
கொல்ல
சக்கரத்தை
ஏவிக் கொண்டிருந்தார்!
அவள் பார்வைக்குக்
கட்டுப்பட்டு,
சக்கரம்
அங்கேயே
நின்றிருந்தது!
காளி கூட
பொறாமைத் தீயால்
கலா முகனை
மிதித்துக்
கொண்டிருந்தாள்!
கண்ணன்
அர்ச்சுனனுக்கு
கீதையைச்
சொல்லிக் கொண்டிருந்தான்!
அதைக் கடக்கையில்,
அவள்
ஓரவிழிப் பார்வை
ஒன்றை
உதிர்த்தாள்!
ஐயோ...!
அவ்வளவு தான்!
அங்கிருந்த
சிலைகளுள்
ஒன்றானேன்!
அனால்
அந்த பார்வை
சொன்ன
செய்தி தான்
என்ன???
சென்றேன்...!
கொலுசொலி
இசைத்தது!
திரும்பினேன்!
கொடியிடை
தெரிய
புடவை கட்டிய
பதுமை நின்றது!
கொடி
நளினமாய்
அசைந்தது!
அவள்
என்னைக்
கடந்து சென்றாள்!
கோவில்
வாசலிலேயே
தேவி தரிசனம்
கிடைத்தது!
அர்ச்சனைத்
தட்டிலிருந்த
தீபம்
அவளை
தொடப் போகும்
சந்தோசத்தில்
ஆனந்த கூத்தாடியது!
கோவில் சிலைகள்
அழகு சிலையை
கண் கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருந்தன!
சிங்க முக
அரக்கன் கூட
அவளைப் பார்த்து
வாயைப்
பிளந்து விட்டான்!
திருமால்
அரக்கனைக்
கொல்ல
சக்கரத்தை
ஏவிக் கொண்டிருந்தார்!
அவள் பார்வைக்குக்
கட்டுப்பட்டு,
சக்கரம்
அங்கேயே
நின்றிருந்தது!
காளி கூட
பொறாமைத் தீயால்
கலா முகனை
மிதித்துக்
கொண்டிருந்தாள்!
கண்ணன்
அர்ச்சுனனுக்கு
கீதையைச்
சொல்லிக் கொண்டிருந்தான்!
அதைக் கடக்கையில்,
அவள்
ஓரவிழிப் பார்வை
ஒன்றை
உதிர்த்தாள்!
ஐயோ...!
அவ்வளவு தான்!
அங்கிருந்த
சிலைகளுள்
ஒன்றானேன்!
அனால்
அந்த பார்வை
சொன்ன
செய்தி தான்
என்ன???
Saturday, July 26, 2008
தொலைந்து போன கேள்விகள்
கல்லூரியில்
கண்ணுக்கழகான
பெண்கள்
பலர்
இருந்தும்
என் கண்களுக்கு
நீ
அழகாகத்
தெரிந்தது ஏன்?
உன்னை
பார்த்தவுடன்
இதயம்
படபடப்பது ஏன்?
கடந்து போன
நீ
திரும்பிப்
பார்தது ஏன்?
திரும்பிப் பார்த்தும்
புன்னகைக்காதது
ஏன்?
நீ மழையில்
நனைந்த போது
நானும்
நனைந்தது ஏன்?
கையில்
குடையிருந்தும்!
நடுநிசியில்
உன்னை
நினைத்துக்
கவிதை
எழுதியது ஏன்?
தனிமையில்
கிடைத்த
வாய்ப்புகள்
யாவையும்
நழுவ விட்டது ஏன்?
காதலைச்
சொல்லும்
கவிதைகள்
பல இருந்தும்
அதை
உன் கையில்
கொடுக்கும்
தைரியம்
என்னிடம்
ஏன் இல்லை?
தயக்கதிலும்
உன்
அண்ணனின்
முரட்டுப் பார்வையிலும்
தொலைந்து போன
கேள்விகள்!
கடைசியில்
"தைரியம்
இல்லாதவனுக்கு
காதல்
எதற்கு?"
என்ற
நண்பனின்
கேள்விக்குக் கூட
பதில் இல்லை
என்னிடம்..!
கண்ணுக்கழகான
பெண்கள்
பலர்
இருந்தும்
என் கண்களுக்கு
நீ
அழகாகத்
தெரிந்தது ஏன்?
உன்னை
பார்த்தவுடன்
இதயம்
படபடப்பது ஏன்?
கடந்து போன
நீ
திரும்பிப்
பார்தது ஏன்?
திரும்பிப் பார்த்தும்
புன்னகைக்காதது
ஏன்?
நீ மழையில்
நனைந்த போது
நானும்
நனைந்தது ஏன்?
கையில்
குடையிருந்தும்!
நடுநிசியில்
உன்னை
நினைத்துக்
கவிதை
எழுதியது ஏன்?
தனிமையில்
கிடைத்த
வாய்ப்புகள்
யாவையும்
நழுவ விட்டது ஏன்?
காதலைச்
சொல்லும்
கவிதைகள்
பல இருந்தும்
அதை
உன் கையில்
கொடுக்கும்
தைரியம்
என்னிடம்
ஏன் இல்லை?
தயக்கதிலும்
உன்
அண்ணனின்
முரட்டுப் பார்வையிலும்
தொலைந்து போன
கேள்விகள்!
கடைசியில்
"தைரியம்
இல்லாதவனுக்கு
காதல்
எதற்கு?"
என்ற
நண்பனின்
கேள்விக்குக் கூட
பதில் இல்லை
என்னிடம்..!
Subscribe to:
Posts (Atom)